இன்று எங்கள் “தமிழ் இளையோர் அமைப்பு” இற்கு வயது பதினைந்து பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர்களால் தமிழ் இளையோர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இளையோர் அமைப்பின் பிரித்தானியா கிளைக்கு இன்று வயது பதினைந்து. தாயகத்தில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உதவுவதற்காக முதன் முதலாக ஒன்று சேர்ந்தார்கள் எம் இளையோர்கள். பின்பு “இளந்தளிர்” ஆக துளிர் விட்டு பிரித்தானியா வாழ் இளையோர்களின் பல்கலைத் திறனை வெளி உலகிற்கு பறைசாற்றினார்கள். தங்கள் குறிக்கோளை அடைவதற்கு வழிவகுக்கும் விதமாக பகுதி பகுதியாக …
